search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் கால்வாய்"

    • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
    • கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சியில் கழிவுநீா் கால்வாயைத் தூா்வார வலியுறுத்தி பொதுமக்கள் நகரமன்றத்தலைவா் பாப்புக்கண்ணனிடம் மனு அளித்தனா்.

    இதுகுறித்து தாராபுரம் நகராட்சி நேதாஜி வீதி ஏபிஜே.அப்துல் கலாம் சமூக நல்லிணக்க நற்பணி மன்றத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் நகராட்சி 5 மற்றும் 14 வது வாா்டுகளுக்குள்பட்ட நேரு நகா், நேதாஜி வீதி, சங்கா் மில் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகளால் குறுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.

    கழிவுநீா் கால்வாய் குறுக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது கழிவுநீா் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், கழிவுநீா் கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறும் நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று அபாயமும் காணப்படுகிறது.

    எனவே கழிவுநீா் கால்வாயை சீரமைக்கவும், அடிக்கடி கழிவுநீா் கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • ரூ.10 கோடி மதிப்பில் கழிவுநீரரை சுத்தப்படுத்தி நன்னீராக்கும் திட்டம் மும்முரமாக நடக்கிறது.
    • கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கழிவுநீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உருவாகி வருகிறது.18 வார்டுகளுடன் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்த மானாமதுரை தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்று சில மாதங்களிலேயே நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இதன் வார்டுகள் 27 ஆக உயர்த்தப்பட்டன.

    நகராட்சியின் முதல் தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பின ரான தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.மாரியப்பன்கென்னடி பதவி வகித்து வருகிறார். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அலுவலகத்துக்கு தேவை யான பணியாளர்கள் நிய மிக்கப்படாமல் அலுவலக பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி அலுவலகத்தில் அனைத்து பதவிகளுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நகராட்சி அலுவலகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வார்டுகளில் வலியுறுத்தப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் நிறை வேற்றப்பட்டு வருகிறது. அரசகுழி பகுதியில் மின்மயான தகனமேடை அமைக்கும் பணி நிறை வடையும் நிலையில் உள்ளது.

    தற்போது மானாமதுரை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார், சிமெண்ட் சாலைகள், பேவர்பிளாக்கல் பதித்தல், கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

    குறிப்பாக மானா மதுரையில் சேகரமாகும் கழிவுநீரை வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் பெரிய அளவிலான கிணற்றுக்கு கொண்டுவந்து சேர்த்து அங்கிருந்து குழாய்கள் மூலம் கழிவுநீரை தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைக்கப்பட வுள்ள சுத்திகரிப்பு நிலை யத்துக்கு கொண்டு வந்து நண்ணீராக்கி அதை விவ சாய தேவைக்கு பயன்படுத்த திட்டம் தயாரித்து அதற்காக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீதிகளை சுத்தப்படுத்தும் பணி தினமும் நடந்து வருகிறது.

    இது குறித்து நகர்மன்ற தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி கூறுகையில், மானாமதுரை நகருக்கு தேவையான அனைத்து வசதிகளும் வார்டு உறுப்பி னர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை யும் நகராட்சிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அனைத்து வார்டுகளுக்கும் தேவையான வசதிகள் கண்டறியப்பட்டு அதை நிறைவேற்ற நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கி பணிகள் செயல்படுத்தப்படு கின்றன.

    குறிப்பாக நகரில் தூய்மை பணி, குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகள் தெருக்களிலும், வீதிகளிலும் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. நகரில் 1,275 பல்புகள் பொருத்தப்பட உள்ளன என்றார்.

    • மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.

    ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.

    இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.

    • மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது.
    • பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து.

    இது தமிழகத்தில் 15 வார்டுகள் உடைய மிகப்பெரிய பஞ்சாயத்தா கவும், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அரசு தலைமை அலுவலகங்கள் இயங்கி வரும் பஞ்சாய த்தாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான கழிவுநீர் கால்வாய் தூர்வாரி புதுப்பித்தல், தெருவிளக்கு, குடிநீர், உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது.

    மேலும் மாந்தோப்பு, காளியப்ப செட்டி காலனி, நெல்லி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் மக்கள் இச்சாலையை முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இப்பகுதிகளுக்கு செல்ல பிடமனேரி ஏரிக்கரை முக்கிய சாலையில் இருந்து சொசைட்டி காலனி வழியாக தான் செல்ல வேண்டும்.

    சொசைட்டி காலனி உள் நுழையும் பிரிவு சாலையில் 40 அடி அகலத்திற்கு கழிவுநீர் கால்வாய், சிறிய கல்வெட்டு உள்ளது.

    இந்த கல்வெட்டின் அடியில் செல்லும் கழிவு நீர் கால்வாய் பல வருடங்களாக தூர்வாரப்படாததால் கால்வாய் அடைத்து கழிவு நீர் ரோட்டில் சென்றது.

    இது சம்பந்தமாக பொது மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஒரு மாதத்திற்கு பின் பஞ்சாயத்து நிர்வாகம் கல்வெட்டை உடைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தது.

    பின்னர் பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ள பகுதி என்பதால் கார், இருசக்கர வாகனம் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    கட்டுமான பணிக்காக வரும் கனரக வாகனங்கள் திரும்ப வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

    தொடர்ந்து கல்வெட்டு பள்ளத்தில் கார் இருசக்கர வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.

    பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கல்வெட்டை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள்.

    சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு 6 பிளாக்குகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்த பலத்த மழையின்போது மழைத் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது.

    இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு தண்ணீர் சரிவர செல்ல முடியவில்லை.

    மேலும் இந்த கழிவு தண்ணீர் சுத்தி கரிக்கப்படாமல் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரித்தண்ணீர் மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

     இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

    மேலும் கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    அடுத்து வரும் மழையை கருத்தில் கொண்டு தங்கு தடையின்றி மழைத்தண்ணீர் வடிந்து செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இங்குள்ள கழிவுநீர் கால் வாய் தண்ணீர் ஏரியில் நேரடியாக கலந்து ஏரித் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

    ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    இவைகள் அனைத்தும் 28 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

    இதனால் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்தும் வருகிறது.

    மேலும், இந்த கட்டிங்களின் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    பாழடைந்த கட்டிடங்கள் தற்போது மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்திவிட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்துவிட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர்.

    இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்துகின்றன.

    பாழடைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதியில் பகல்-இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை.

    இவைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் பலர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.

    பஸ் நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக் கப்படாமலேயே உள்ளது.

    இதனால் 3 கி. மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இங்குள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள். இது குறித்து அரசு துறைகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பசுமாடு, அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பசுமாட்டை கழிவுநீர் கால்வாய்க்குள் இருந்து மீட்க முயன்றார். ஆனால் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    • 23 வீடுகள் சுவர் இடிப்பு
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்,

    வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாத நிலை உள்ளது. இதனால் கழிவு நீரோடு மழை நீர் சேர்ந்து அந்த பகுதியில் தேங்கியது.

    அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதை யடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் சில வீடுகளில் பாதி பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, அம்பேத்கர் நகர் பகுதியில் மெயின் தெருவில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.

    சுமார் 23 வீடுகளின் ஆக்கிரமிப்பு அகற்றி உள்ளோம். விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படும் என்றனர்.

    • மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய்களும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
    • அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு செய்தனர்.

    காவேரிபட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் ஒன்றியம் ஏர்ரஅள்ளி ஊராட்சி அண்ணா நகர் , ஸ்ரீராமுலு நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய்களும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட அவை தலைவர் நாகராஜ் மற்றும் ஏர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு செய்தனர்.

    அப்போது உடன் ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ரெயில்வே நுழைவு பாலத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றுதல் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

    ஊத்துக்குளி :

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஊத்துக்குளி சென்னிமலை சாலை அரசன்காடு 2-வது வீதி மற்றும் 1வது குறுக்கு வீதி மற்றும் கடைசி வீதியில் விடுபட்ட பகுதிகளில் உள்ள மண் சாலைகளை ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றுதல்,நமக்கு நாமே திட்டத்தில் சென்னிமலை சாலை, ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.4.50 லட்சத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி, முன்னாள் ஊத்துக்குளி பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி குமார், பேரூராட்சி தொகுதி இளநிலை பொறியாளர், வேலை ஒப்பந்ததாரர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.

    பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.

    எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • சோழவந்தான் அருகே பேவர் பிளாக், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பெருமாள்பட்டி கிராமத்தின் தேவர் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் மணல்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தாழ்வான பகுதியான இங்கு சாதாரண மழைக்கு தண்ணீர் குளம் போல் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அவல நிலை உள்ளதாக விவசாயி அழகுசாமி (40) தெரிவித்தார். இதேபோல் வீரலட்சுமி (23) கூறுகையில், எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.

    • ரூ.6 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • மின் மோட்டார் மூலம் தேங்கியிருந்த கழிவு நீர் வெளியேற்றம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெருவில் கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் பல வருடங்களாக மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கும் உள்ளாகி வந்தனர்.

    பின்னர் இது குறித்து பல வருடங்களாக இங்கு தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவு நீரை அகற்ற கால்வாயில் கழிவுநீர் தடையின்றி வெளியேற சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற் பட்டதை முழு வதுமாக அகற்றி கழிவு நீரை மின் மோட்டார் மூலம் வெளி யேற்றப்பட்டது.

    அதன் பின் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ×